
“வைக்கம் ஆறுக்குட்டியில் பெரியார் சிறையிலிருந்த நினைவாக அங்கே நினைவுச் சிறைச்சாலை கட்ட கேரள அரசுடன் பேசி வேலையை தொடங்கினோம்.
ஆனால், இப்போது அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அமைச்சரின் விளக்கத்தை வேண்டுகிறேன்.
பெரியாரை கொள்கைத் தலைவர் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தவெக, கோவையில் கட்டப்பட்ட பெரியார் நூலகத்தை இன்னும் திறக்கவில்லை.” என எ.வ வேலு பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், “தம்பட்டம்…தம்பட்டம் என பேசுவது தேவையில்லாதது.
எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியார் சிலையும் அம்பேத்கர் சிலையும் இருக்கிறது. அறிவாலயத்தில் பெரியார் சிலை எங்கே?” என்றார்.
தொடர்ந்து எ.வ வேலு, “புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் வரவேற்போம், பாராட்டுவோம்.
காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டிய அவசியம் ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
“அமைச்சர் போல திமுக ஆட்சியின் சாதனைகளை பேசாமல், இப்போதுள்ள மானியக் கோரிக்கை பற்றி பேசுங்கள்.” – எ.வ.வேலுவை நோக்கி சபாநாயகர்