முதல்வர் விஜய்யின் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டிருந்தது. அதில், தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏக்களும் எதிராக 22 எம்.எல்.ஏக்களும் நடுநிலையாக 5 எம்.எல்.ஏக்களும் வாக்களித்திருக்கின்றனர்.

தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அவையில் முதல்வர் விஜய் முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறோம் என அறிவித்தார். மதிமுக எம்.எல்.ஏக்கள் இருவரும் அவைக்கு வரவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, ஐ.யூ.எம்.எல், அமமுக சார்பில் வென்ற காமராஜ் ஆகியோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக இடையேதான் சட்டமன்றத்துக்குள் ஒரு களேபரமே நடந்தது.