2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் செஷனுக்காக வருகை தந்த அதிமுகவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சட்டமன்றத்துக்குள் சென்றிருந்தனர்.
காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இதற்காக காலை 9:30 மணியளவில் எடப்பாடி பழனிசானி சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.காமராஜ் போன்ற எம்.எல்.ஏக்கள் வரவேற்று அவைக்குள் அழைத்து சென்றனர்.