சதி பண்றாங்க.. என்னை சுத்தி எதோ நடக்குது? அச்சத்தில் திருமா.. தவெக அரசு மீது கடும் அப்செட்? | Plot to Sabotage VCK Conference? Thirumavalavan Faces Security Lapses Under TVK Rule

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மேடையில் ஏற்பட்ட கடுமையான நெரிசலால் விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்க நிலை ஏற்பட்டது.

ஆனால், இது வெறும் நிர்வாகக் கோளாறு அல்லது கூட்ட நெரிசல் மட்டுமல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட ‘சதிச் செயல்’ மற்றும் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முயற்சி என விசிக தலைமை தற்போது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

Thirumavalavan

மேடையில் நடந்தது என்ன?

ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற இம்மாநாட்டிற்கு சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மாநாட்டு மேடையை நோக்கி திடீரெனப் பாய்ந்த ஒரு பெரும் கும்பல், தடுப்புகளை உடைத்துக்கொண்டு மேடையை முற்றுகையிட்டது. இதனால் மேடையில் கடுமையான இடநெருக்கடியும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

வழக்கமாக மணி கணக்கில் முழங்கும் திருமாவளவன், தீவிர மூச்சுத்திணறல் காரணமாகப் பேச முடியாமல் அவதியுற்றார். தொண்டர்களை அமைதி காக்குமாறு எச்சரித்தும் கட்டுக்கடங்காத நிலை நீடித்ததால், தீர்மானங்களை மட்டும் ஓரிரு நிமிடங்களில் அவசரமாக வாசித்துவிட்டு மேடையை விட்டு வெளியேறினார்.

சதித் திட்டமும் தாக்குதல் முயற்சி

மாநாட்டு நிகழ்வுகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விசிக சார்பில் முறைப்படி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

திட்டமிட்ட நெரிசல்: சமூக விரோத சக்திகள் சிலர் வேண்டுமென்றே கூட்டத்தைத் தூண்டிவிட்டு, மேடையை நோக்கி ஒரே நேரத்தில் தள்ளிவிட்டு கூட்ட நெரிசலை செயற்கையாக உருவாக்கினர்.

தாக்குதல் முயற்சி: இந்த குழப்பமான சூழலைப் பயன்படுத்தி விசிக தலைவர் திருமாவளவன் மீது நேரடித் தாக்குதல் நடத்த ஒரு தரப்பு திட்டமிட்டிருந்தது.

ஆதாரங்கள் சமர்ப்பிப்பு: மேடையை நோக்கி அத்துமீறி நுழைந்த சந்தேகத்திற்கிடமான நபர்களின் வீடியோ பதிவுகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தவெக ஆட்சியில் பாதுகாப்பு குறைபாடா? எழுந்துள்ள அரசியல் சலசலப்பு

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், ஆளும் அரசின் கீழ் விசிக தலைவருக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை எழுந்துள்ளது. பல லட்சம் பேர் கூடும் ஒரு மாநாட்டிற்குத் தேவையான முறையான போலீஸ் பாதுகாப்பு, தடுப்பு அரண்கள் மற்றும் போக்குவரத்து சீரமைப்புகளை உளவுத்துறையும் காவல்துறையும் திட்டமிட்டு மெத்தனமாக கையாண்டதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஆளும் தவெக அரசுடன் அரசியல் ரீதியான கூட்டணியில் விசிக இருந்தாலும், திருமாவளவனின் தனிப்பட்ட பாதுகாப்பில் காட்டப்பட்ட இந்த அலட்சியம் விசிக வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநாட்டில் நடந்த குழப்பம் ஒரு தற்செயலான விபத்தா அல்லது தலைவரின் வளர்ச்சியை முடக்க நடந்த உள்நோக்கம் கொண்ட சதியா என்பதை வெளிக்கொண்டுவர சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *