சரத்பவாரின் MPக்களுக்காக தேசியவாத காங்கிரஸை இணைக்க பாஜக முயற்சி; அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு | BJP seeks to merge NCP factions to secure Sharad Pawar’s MPs; Ajit Pawar’s family opposes the move

Spread the love

பார்த் பவார் ஆதிக்கம்

கட்சியில் பார்த் பவார் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அஜித்பவார் பவார் இறந்த பிறகு சரத்பவார் மீண்டும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காகத்தான் இரு அணிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது பார்த் பவார் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காமல் இரு அணிகளும் ஒன்றாகச் சேர தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு

சரத்பவார் கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க கூட்டணியில் சேரும் முடிவில் உறுதியாக இருக்கின்றனர். சரத்பவார் இவ்விவகாரத்தில் இன்னும் உறுதியான ஒரு முடிவை எடுக்காமல் இருக்கிறார்.

அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் ஒன்று சேருவதை அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் மற்றும் மகன் பார்த் பவார் விரும்பவில்லை என்று கட்சியின் இரண்டாக கட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்தால் சரத்பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலேயின் ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்று பயப்படுகின்றனர்.

எனவேதான் இரு அணிகளின் இணைப்புக்கு அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார் ஆகியோர் கட்சியின் அதிகாரத்தை குடும்பத்திற்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ள தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல் மற்றும் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே ஆகியோர், பவார் குடும்பத்தின் இந்த ஆதிக்கத்தால் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக உணர்கின்றனர். பா.ஜ.க கூட்டணி ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் பதவிக்கு பிரபுல் படேல் மற்றும் பார்த் பவார் ஆகிய இருவருமே போட்டியிடுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *