சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார்.
இதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் விஜய், ” ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்தவகையில் இது என் மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி. நம் வீட்டில் அம்மா, அக்கா, பாட்டி என ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பும் முக்கியம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவோம். பெண்களின் பாதுகாப்பிற்கு போதை ஒழிப்பு முக்கியம். போதையை அகற்ற வேண்டும்.
பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால் தான் போதைப்பொருள் நடமாட்டம் பரவி விட்டது. பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன். குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்று தர வேண்டும். பெண்களுக்கான கண்ணியம் உச்சபட்ச முன்னுரிமை.