“சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார்” – என்ன சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்? | “Brother Stalin will soon become Chief Minister” – What does Anita Radhakrishnan say?

Spread the love

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் தி.மு.க அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், “இந்தக் குருகாட்டூர் பகுதியில் எனக்கு மட்டும் 430-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. பா.ஜ.கவுக்கு 148 ஓட்டு விழுந்துள்ளது. இந்தத் தொகுதியில் த.வெ.க சார்பில் நின்ற யாரென்றே தெரியாத நபருக்கு 400-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. முந்தைய தி.மு.க ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்

உங்களுக்காக அனைத்தும் செய்த முதல்வரை மறந்து விட்டீர்கள். என்னை மறந்து விட்டீர்கள். எங்களது கனிமொழி எம்பி-யை மறந்து விட்டீர்கள். என்னைவிட அவருக்குக் குறைவாகத்தான் போட்டு உள்ளீர்கள். ஆனால், என்ன காரணத்திற்காக அவருக்கு இவ்வளவு வாக்குகள் போட்டீர்கள்? பா.ஜ.கவிற்கு ஓட்டுப் போட்டது கூட பரவாயில்லை. ஜோசப் விஜய் என்பவர் முழங்கால் போட்டு நடந்ததற்காக அவருக்காக வாக்கு போட்டீர்களா? நாங்கள் உங்களை ஏமாற்றி விட்டோமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *