சீனா உதவியுடன் விண்வெளி மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்! – இந்தியாவை உளவு பார்க்கிறதா? | Is Pakistan spying India from space

Spread the love

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மற்றும் பெகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam attack) சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பே, பாகிஸ்தான் தனது உளவு செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தத் தொடங்கிவிட்டது என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அந்தத் தாக்குதலுக்கு பின் இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தம் செய்து தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. எல்லைகளில் துப்பாக்கிகள் அமைதியாகிவிட்டாலும், விண்வெளியில் பாகிஸ்தான் இந்தியாவின் மேல் தன் பார்வையை இன்னும் தீவிரமாகப் பதித்து வருகிறது என்கிறார்கள் சர்வதேக அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த 16 மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் தனது உளவு செயற்கைக்கோள் நெட்வொர்க்கை (Spy satellite network) அசுர வேகத்தில் பலப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 2025 முதல் 2026 ஜூன் வரையிலான குறுகிய காலத்தில், பாகிஸ்தான் 6 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை (Earth-observation satellites) விண்ணில் செலுத்தி, இந்திய எல்லைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளது.

1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘சுபார்கோ’ (SUPARCO), கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் 15 செயற்கைக்கோள்களை மட்டுமே அனுப்பியிருந்தது. ஆனால், தற்போது ஒரே ஆண்டிற்குள் 6 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது, விண்வெளி ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“பூர்வீகமாகவே விண்வெளித் துறையில் பின்தங்கியிருந்த ஒரு நாடு, திடீரென இத்தகைய வளர்ச்சியை எட்டுவது சாத்தியமற்றது; இதற்குப் பின்னால் பெரிய பின்னணி உள்ளது” என இஸ்ரோ (ISRO) முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *