சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை” – நயினார் நாகேந்திரன் | Nainar Nagendran has sought a CBI inquiry into the shooting deaths of Tamils ​​in Karnataka.

Spread the love

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையேயும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “கர்நாடக வனத்துறையின் போலி என்கவுண்டர் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற திரு. ஜோசப் விஜய் வலியுறுத்த வேண்டும்! கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் அம்மாநில வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் விவசாயிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, இச்சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட ‘போலி என்கவுண்டர்’ என்பதை நிரூபித்து, அந்தக் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

10 அடிக்கும் குறைவான, மிக நெருக்கமான தொலைவிலிருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பது வனத்துறையின் கொடூரமான முகத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக காவல்துறையின் விசாரணையில் துளியும் நம்பிக்கையில்லை. எனவே உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரவும் இந்த வழக்கை உடனடியாக சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டியது அவசியமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *