மும்பை: பூங்காவில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; உதவி போலீஸ் கமிஷனர் கைது; என்ன நடந்தது?

Spread the love

மும்பை ஒர்லி பகுதியில் இருக்கும் பூங்காவில் 9 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த 56 வயது உதவி போலீஸ் கமிஷனர் பூங்காவில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்டு சிறுமியிடம் சென்றார்.

அவர் அச்சிறுமியிடம் தனது ஆடையைக் கழற்றி தனது அந்தரங்க உறுப்பை சிறுமியிடம் காட்டினார். அதோடு அச்சிறுமியிடம் தனது அந்தரங்க உறுப்பைத் தொடும்படி கேட்டுக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார். வீட்டிற்குச் சென்று தனது தாயாரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனே அப்பெண்ணின் தாயார் இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் உடனே பூங்காவிற்குச் சென்று குற்றவாளி குறித்து விசாரித்தனர்.

கைது
கைது

பூங்காவில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. இதையடுத்து அங்கு வருபவர்களிடம் விசாரணை நடத்தியதில் அடிக்கடி அங்கு வரக்கூடியது யார் என்ற விபரத்தைச் சேகரித்து உதவி போலீஸ் கமிஷனர் அடையாளம் காணப்பட்டு சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளனர். சிறுமியின் தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். நாக்பூரைச் சேர்ந்த அந்தப் போலீஸ் அதிகாரி கடந்த நவம்பர் மாதம்தான் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவர் மும்பை ஒர்லியில் தனியாக வசித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு புனே அருகில் 4 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *