சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: “தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" – சிபிஎம் சண்முகம்

Spread the love

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள வனப்​பகு​தி​யில் கர்நாடக வனத்​துறை​யினர் ரோந்து பணி​யின்​போது, மறைந்​திருந்த 4 தமிழர்கள் மீது நாட்டு துப்​பாக்​கி​யால் தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்படுகிறது. இதில், ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள் மற்​றும் கிராம மக்​கள் ஹனூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிபிஎம் சண்முகம் தன் எக்ஸ் பக்கத்தில், “கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள், காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *