சென்னையில் ஒரே நாளில் இரு கொலைகள்: "இது இந்திய அளவில் தலைகுனிவை.!" – நயினார் நாகேந்திரன் காட்டம்

Spread the love

சென்னையில் நேற்று (செப்டம்பர் 6) ஒரே நாளில் நடந்த கொலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

நயினார் நாகேந்திரன் தனது பதிவில்,

“தலைநகரமா அல்லது கொலைநகரமா?

அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் ஓடோட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் இலவசமாகப் பீடி தர மறுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரை, போதையில் இருந்த கும்பல் உயிர் போகும் அளவிற்குக் கொடூரமாகத் தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி பதைபதைக்கச் செய்கிறது.

கொலை
கொலை

தலைநகரில் ஒரே நாளில் நடந்த இந்த இரு படுகொலைகளும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் “Reels” ஆட்சியின் “Reality”-யை மக்களுக்கு உணர்த்துகிறது.

குறிப்பாக, கிட்டத்தட்ட 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டுள்ள தமிழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவருக்கும் பாதுகாப்பில்லை, தமிழகத்திற்குப் பிழைப்புத் தேடி வந்தவருக்கும் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்பது இந்திய அளவில் நமக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும். நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கும்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்களிடமிருந்து தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் திரு. விஜய் அவர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அலட்சியம் செய்யக் கூடாது.” என்றிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *