காத்திருக்கும் ரன் ரேட் சவால்
இதில் சவாலான விஷயம் என்னவென்றால், சென்னை அணியின் ரன் ரேட் தற்சமயம் ராஜஸ்தான் அணியை விட அதிகமாக இருந்தாலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளது.
எனவே, புள்ளிகள் சமமாகும் பட்சத்தில் ரன் ரேட் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், வரும் போட்டிகளில் வெறும் வெற்றியை மட்டும் குறிவைக்காமல் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே இருக்கிறது.
மேஜிக்கை நிகழ்த்துமா சிஎஸ்கே?
லக்னோ மற்றும் மும்பை போன்ற பலமான அணிகள் ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், சென்னை அணி தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த மேஜிக் 16 புள்ளிகளைத் தாண்டி முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறுமா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் ஆவலோடு காத்திருக்கிறது.