சென்னை: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

Spread the love

சென்னை, தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள வீட்டில் 27 வயதுடைய பெண் ஒருவர் அவரின் அக்காவுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, அவரது அக்கா உறவினரை பார்ப்பதற்காக வெளியில் சென்று விட்டார். அதனால் 27 வயதுடைய இளம்பெண் தனியாக வீட்டிலிருந்தார். அன்றைய தினம் இரவு வீட்டை உள் தாழ்ப்பாள் போடாமல் வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வீட்டு உரிமையாளரின் மகன் ஆனந்த கிருஷ்ணன் என்பவர், தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார்.

ஆனந்த கிருஷ்ணன்

ஆனந்த கிருஷ்ணன்

அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சத்தம் போட்டிருக்கிறார். உடனே ஆனந்த கிருஷ்ணன், அந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தனக்கு நடந்த கொடுமை குறித்து இளம்பெண், தன்னுடைய அக்காளிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆனந்த கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்த கிருஷ்ணன், தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *