சென்னை பள்ளிக்கரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எங்கு?
பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகும்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
எதனால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.