500 ரூபாய் சொத்து வரி கட்டி வந்த ஒருவருக்கு 7500 ரூபாய் வரியென மறு மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான சொத்து வரி உயர்வு இது. ஆணையர் சமீரன் நிதி கோரிக்கையோடு முதல்வர் கையில் வைத்திருக்கும் நகராட்சி நிர்வாகத்துறையை அணுகியதாகவும் முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த பவர்புல்லான அதிகாரி ஒருவர்தான் சொத்துவரியை மறுமதிப்பீடு செய்யும் ஐடியாவை கொடுத்ததாகவும் சொல்கின்றனர். அந்த அதிகாரி ஏற்கெனவே சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்தவர் என்பதால் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் சேர்ந்து செட்டிங் போட்டு சொத்துவரியில் பெரிதாக அடித்துவிட்டதாக நம்புகிறார். அதனால்தான் நிதி கேட்ட மாநகராட்சியிடம் சொத்து வரி மறுமதிப்பீட்டு ஐடியாவை கொடுத்திருக்கிறார். இதன்மூலம் வரி வருவாயும் கணிசமாக கூடும், திமுக மீதும் புகார்களை அடுக்கலாம் அதன் மூலம் முதல்வரின் கவனத்தை ஈர்க்கலாம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என யோசித்திருக்கிறார். ஆனால், அதிகாரிகளாய் கூடி பேசி முடிவெடுத்த இந்த விவகாரத்தை திமுக உடனடியாக கையிலெடுத்து அடித்து ஆட ஆரம்பித்துவிட்டது.
எங்களிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே முடிவெடுத்துவிட்டார்கள் என மேயர் பிரியா தொடங்கி வைக்க, சொத்துவரி 300% உயர்த்தப்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் மா.சு அடித்து ஆடினார். சென்னையில் பெரும்பாலான தொகுதிகளை தவெக வென்றிருக்கிறது. சொத்து வரி கன்னாபின்னாவென தீட்டப்பட்டவுடன் தவெக எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகளின் வீட்டுக்கதவை மக்கள் தட்ட தொடங்கிவிட்டனர். தவெகவினர் தலைமையை மொய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் எழ தொடங்கிவிட்டது. முதல்வரிடம் நல்லப் பெயர் வாங்கலாம் என அதிகாரிகள் துடுக்குத்தனமாக செய்த செயல் ஆளுங்கட்சிக்கே ஆப்பாகிறது என்பதை உணர்ந்தவுடன் தான் முதல்வர் அலுவலகம் அவசர அவசரமாக பேக் அடித்திருக்கிறது. சொத்துவரி மறுமதிப்பீடும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது” என அத்தனை பின்னணி தகவல்களையும் புட்டு புட்டு வைத்தனர்.
‘மாநகராட்சி மற்றும் அரசின் ஈகோ மோதலுக்கும் அதிகாரிகளின் துடுக்குத்தனத்துக்கும் மக்கள் தலைவலியை எதிர்கொள்ள வேண்டுமா?’ என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.