“ஜம்மு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது”.. வங்கதேச கருத்தரங்கில் எதிர்ப்பு தெரிவித்த பெண் அதிகாரி! | Jammu Kashmir intergral part of India, India diplomat flags wrong map at Dhaka

Spread the love

International

oi-Nantha Kumar R

டாக்கா: ”இங்கு காண்பிக்கப்பட்டுள்ள மேப் தவறாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும்” என்று வங்கதேசத்தில் நடந்த கருத்தரங்கில் இந்தியா மேப் தவறாக காட்டப்பட்டதற்கு இந்திய தூதரகத்தின் இளம் பெண் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்த வீடியோ தற்போது வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

வங்கதேசத்தில் ‘சார்க்’ அமைப்பை உயிர்பிப்பதற்கான வழிகள் என்ற தலைப்பில் BIISS நிறுவனத்தில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் இந்தியா சார்பில் இந்திய தூதரக அதிகாரி பூஜா குமாரி ஷா பங்கேற்றார்.

jammu-kashmir-intergral-part-of-india-india-diplomat-flags-wrong-map-at-dhaka

இந்தியாவிற்கான வங்கதேச முன்னாள் தூதர் அகமது தாரிக் கரீம் பேசினார். இவர் கடந்த 2009 ம் ஆண்டு முதல் 2014 வரை இந்தியாவிற்கான வங்கதேச தூதராக பணியாற்றினார். இவர் பேசியபோது ஜம்மு காஷ்மீரின் மேப் தவறாக காண்பிக்கப்பட்டது. இதற்கு இந்திய தூதரக அதிகாரி பூஜா குமாரி ஷா எதிர்ப்பு தெரிவித்தார்.

பூஜா குமாரி ஷா, ”இங்கு காண்பிக்கப்பட்டுள்ள இந்தியாவின் மேப் தவறாக காட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும்” என்றார். இந்த வேளையில் அகமது தாரிக் கரீம் கூறுகையில், ”இது ரெப்ரெஸ்சென்டேஷனல் பர்பஸ்க்கு மட்டும் தான். இது நாடுகளின் எல்லைகளை சரியாக காண்பிக்காது. இதில் உள்ள எல்லைகள் உண்மையானவை அல்ல” என்றார்.

இதையடுத்து, பூஜா குமாரி ஷா, ”நான் புரிந்து கொள்கிறேன் சார். ஆனால் ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. அது இங்கே தவறாக காட்டப்பட்டுள்ளது. நான் அதை சுட்டிக்காட்ட விரும்பினேன்” என்று மீண்டும் அழுத்தி கூறினார். இதையடுத்து தாரிக் கரீம் கூறுகையில், ”இந்தியாவை சேர்ந்தவரா?” என்று கேட்டார். அதற்கு அவர், டாக்காவில் உள்ள இந்திய தூதரதகத்தில் இரண்டாம் நிலை செயலாளராக உள்ளேன்” என்றார். இதையடுத்து பூஜா குமாரி ஷா, ”உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்றார்.

அதன்பிறகு தொடர்ந்து அகமது தாரிக் கரீம் பேசுகையில், ”பெரும்பாலான தெற்காசிய நாடுகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டாலும் கூட பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய கவலைகள் உள்ளன. காலனித்துவ ஆட்சி ஆட்சி வெறும் எல்லைகளை மட்டும் வரையறுக்கவில்லை. அது அரசியல், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை சிந்திக்க வைத்தது. அண்டை நாடுகளை நட்பு ரீதியாக பழகுவதை தவிர்த்தது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *