ஜோதிடருக்கு அரசுப் பதவி; கேள்வி எழுப்பிய பிரேமலதா – வாபஸ் பெற்ற தவெக அரசு | Government post for an astrologer; Premalatha questions it — TVK government withdraws decision.

Spread the love

தவெக அரசு மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சட்டசபையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த், “அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும்பொழுது அனைவரும் வரவேற்றார்கள்.

ஆனால் இன்றைக்கு அவரின் ராஜ குருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக் கண்டிக்கிறேன்.

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

அவர் உங்களுக்கு ராஜ குருவாக இருந்தால் அவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன முன்னுதாரணத்தை நீங்கள் காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆட்சி மக்களுக்கான நேர்மையான ஆட்சியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் சில எம்.எல்.ஏ க்களும் தவெக அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்,

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *