நம்மிடையே பேசியவர், “‘ஹபீபி’ படத்துக்குத் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள்கிட்ட இருந்து நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. நான் இன்னும் படத்தைப் பார்க்கல. ஆனா, படத்தைப் பார்த்த இயக்குநர்கள், இப்படி முழுக்க முழுக்க இஸ்லாமிய வாழ்வியலை எந்தப் படமும் காட்டலைனு பாராட்டுறாங்க.
அதையே நானும் உணர்றேன். சொல்லப்போனால், தமிழ்ல நான் முதன்முதல்ல கமிட்டான திரைப்படம் இதுதான். இந்தப் படத்துல நடிக்கும்போது நான் 10-வது படிச்சிட்டு இருந்தேன்.
அதனாலேயே, படம் தொடர்பான நிறைய நினைவுகள் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா, இந்தப் படத்துக்காக நான் கடினமா உழைச்சிருக்கேன். கிராமப்பகுதியில இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
அங்க கேரவான் மாதிரியான பெரிய வசதிகள் எதுவும் இருக்காது. ரெண்டு பேர் மட்டுமே நிற்க இடமுள்ள சின்ன ரூம்ல நிறைய பேர் நின்னு ஷூட் செய்திருக்கோம். படப்பிடிப்புத் தளத்துல எல்லோரும் காலையில ரெஸ்ட் ரூம் போனப் பிறகு மறுபடியும் மாலை நேரத்துலதான் போக முடியும்.
இது சின்ன விஷயங்களாகத் தெரியலாம். ஆனா, இப்படியான விஷயங்களை நாங்க சந்திச்சிருக்கோம். இது என்னை அடுத்தடுத்த படங்களுக்குத் தயார் செய்ததுனும் சொல்லலாம்,” என்றவர், “‘ஜோ’ படத்துல இருந்துதான் என்னுடைய கரியர் தொடங்குச்சுனு சொல்லலாம்.
அதிலிருந்துதான் நானாக ஒரு மெச்சூர் நிலையில இருந்து யோசித்து நடிக்கத் தொடங்கினேன்.