“வாழ்த்து சொல்லி உள்ளே வந்த எஸ்.வி.சேக‌ர் சங்கத்தை கபளீகரம் செய்துட்டார்”- வீதிக்கு வந்த பஞ்சாயத்து | article regarding issues in tamil thiraippada tholilalar koottamaippu lead by s ve shekher

Spread the love

அப்படி போனில் வந்தவர், பிறகு கூட்டமைப்பு பத்தி கொஞ்சம் கொஞ்சமா விசாரிச்சு மெல்ல மெல்ல கூட்டமைப்புக்கு உள்ளே வந்தார். தன்னுடன் தாசரதியையும் கூட்டி வந்தார்.

வந்த கொஞ்ச நாளிலேயே தயாரிப்பாளர் சங்க தலைவரா இருந்த முரளிகிட்ட என்ன பேசினாரோ தெரியல, அவர் ஆதரவுடனேயே ஏற்கெனவே இருந்த தலைவர் மற்றும் பொருளாளரைத் தூக்கிட்டு, தன்னைத் தலைவராகவும் தனக்கு வேண்டிய ஒருத்தரை பொருளாளராகவும் போட்டுக்கிட்டார்.

சங்கம் பதிவு செய்ததுக்கான சான்றிதழையும் அவரே போய் வாங்கிக்கிட்டார்.

இது பத்தி நான் கேட்டப்ப, பதிவு எண் இருந்த அந்தப் பக்கத்தின் ஜெராக்ஸ் மட்டும் எனக்குத் தந்தார்.

சங்க விதிப்படி பை லா செயலாளர்கிட்ட இருக்கணும்னு சொல்லி நான் கேட்டதுக்கு, ‘தர முடியாது, உன்னால என்ன பண்ண முடியும்’னு நாலு பேர் முன்னாடி கொஞ்சம் அசிங்கமாகவே கேட்டார். அது என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு.

அதனாலேயே தொழிலாளர் ஆணையரகத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போனேன்.

கூட்டமைப்பு செயல்படுதோ இல்லையோ அதன் செயலாளார் நான். ஆனா தலைவரா இருக்கிறவர் தனக்கு மட்டுமே அதிகாரம்னு நினைச்சு செயல்படறதை ஏற்க முடியாது. தவிர பதவி மட்டுமே குறிக்கோள்னு வர்ற இவர் மாதிரியான ஆட்களை தொடர்ந்து அந்த இடத்துல இருக்க அனுமதிச்சா, அது அமைப்புக்கு நல்லதில்லைனுதான் இந்த விவகாரத்துல இருந்து ஒதுங்கக் கூடாதுன்னு நினைச்சிருக்கேன்.

அவரை அமைப்புல இருந்து வெளியேத்துற வரைக்கும் ஓயமாட்டேன” என்கிறார் இவர்.

எஸ்.வி சேகர் தரப்பில் என்ன சொல்கிறார்கள்? அவரால் கூட்டமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தாசரதியிடம் பேசினோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *