டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதிலிருந்து விலகுகிறார் N.சந்திரசேகரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், 2017-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மீது ரத்தன் டாடாவிற்கு எப்போதுமே தனிப்பிரியம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகரன் தன்னுடைய பதவி விலகல் குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது…
“டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில்முறை வாழ்க்கையை நான் நிறைவு செய்துள்ளேன்.
இந்தப் பெருமைமிக்க நிறுவனத்திற்குப் பங்காற்ற எனக்குக் கிடைத்த இந்த மனநிறைவான வாய்ப்பிற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த பத்தாண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் மற்றும் ஆழமான பொறுப்பாகும்.
டாடா சன்ஸ் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று முடிவடைகிறது.
எனது பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க சர் தொராப்ஜி டாடா அறக்கட்டளையும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிப் பரிந்துரைத்தன.
இது டாடா சன்ஸ் நியமனம் மற்றும் ஊதியக் குழுவாலும், நிர்வாகக் குழுவாலும் பதிவு செய்யப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்டது.