தஞ்சாவூர்: ”காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி”- சக மாணவன் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

Spread the love

இந்நிலையில், நேற்று மாணவிக்கு வேறு எண்ணில் இருந்து செல்போனில் பேசியுள்ளார் கவின். அப்போது, நான் சொல்கிற படி கேட்டு என்னை காதலி, இல்லை என்றால் உன் போட்டோவை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உலைச்சலுக்கு ஆளான மாணவி விடுதியில் விஷம் அருந்தி விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த விடுதியில் இருக்கும் சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்வதாக எங்க மகள் கல்லூரி நிர்வாகத்தில் புகார் சொல்லியும் அலட்சியத்தால் முறையாக நவடிக்கை எடுக்கவில்லை. இதுவே எங்கள் மகள் சாவுக்கு காரணமாகி விட்டது. தற்கொலைக்கு தள்ளிய மாணவன் கவினுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *