தஞ்சை: 12ம் வகுப்பு படிக்கும் 2 சிறுமியருக்கு பாலியல் தொல்லை; 64 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது | Thanjavur: 64-year-old man arrested under POCSO Act for sexually harassing two Class 12 girls.

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரைச் சேர்ந்தவர் 64 வயதான நாகூர்பிச்சை. இவர் டீக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

அந்த டீக்கடை வழியாக 12ம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய சிறுமியர் இருபர் செல்வது வழக்கம். அப்போது, நாகூர் பிச்சை அந்தச் சிறுமிகளைக் கிண்டல் செய்து வந்துள்ளார்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர்

இரண்டு சிறுமிகளும் தாத்தா வயதுடையவர் விளையாட்டாகப் பேசுகிறார் என்று நினைத்து தாத்தா என்று அழைத்து அவரிடம் சிரித்துப் பேசி வந்தனர். இந்நிலையில், கடந்த 30ம் தேதி மாலை இரு சிறுமிகளும் டீ குடிக்க சென்றுள்ளனர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நாகூர் பிச்சை, டீ கொடுக்கும் போது இரட்டை அர்த்தத்தில் பேசி சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுமிகள் இரண்டு பேரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இதில் ஒரு சிறுமி தனது உறவினரிடம் இதனைச் சொல்லி அழுதிருக்கிறார்கள். இதையடுத்து உறவினர்கள் தைரியம் கொடுக்க, இரண்டு சிறுமிகளும் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தனர்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகூர் பிச்சையைக் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *