தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன் | Enraged by a court order to vacate the house, a son stabbed his 82-year-old father to death in public view

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்டி வந்தார்.

இதனால் தனது வீட்டைவிட்டு வெளியேறிய ஜாபர் பட்டேல் புனேயில் உள்ள தனது மகள் வீட்டில் குடியேறினார். அங்கு இருந்து கொண்டு தனது மகனை வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறி போலீஸில் புகார் செய்தார். அதோடு இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் ஜாபருக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பளித்தது. வீட்டை ஜாபர் பட்டேல் பெயருக்கு மாற்றவேண்டும் என்றும், அவரது மகன் அப்துல் ரஹ்மான் வீட்டைக் காலி செய்து தந்தையிடம் வீட்டை ஒப்படைக்கும்படியும் கோர்ட் உத்தரவிட்டது.

கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து வீட்டிற்கு ஜாபர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அந்நேரம் ஆட்டோவை நடுரோட்டில் அப்துல் ரஹ்மான் வழிமறித்தார். ஆட்டோவிற்குள் இருந்த தனது தந்தையை பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் குத்தினார்.

இதில் ஜாபருடன் பயணம் செய்த அவரது மகளும் காயம் அடைந்தார். இருவரும் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இதில் ஜாபர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்துல் ரஹ்மானைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *