கவின் ஆணவப்படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

Spread the love

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் கடந்த வருடம் ஆணவக் கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் அண்ணன் சுர்ஜித், தந்தை சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதில் மற்ற மூவரும் கைதான நிலையில் கிருஷ்ணகுமாரி கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தான் போலீஸாரல் அவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணன், நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை உயர் நீ்திமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், ’சரவணனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கும்’ என ஆட்சேபனை தெரிவித்தார்.

சரவணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த், “வழக்குக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் சாட்சியங்களை கலைக்க மாட்டோம்; நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயாராக இருக்கிறோம்” தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில், ‘மனுதாரர் இந்த வழக்கின் சாட்சியங்களை சந்திக்கவும் கலைப்பதற்கான முயற்சியோ செய்யக்கூடாது. மனுதாரர் மறு உத்தரவு வரும் வரை கோயம்புத்தூரில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து இடவேண்டும். ஒரு லட்சம் மதிப்பில் பிணை பத்திரம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை வழங்கி மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *