‘தனியாக வந்த எடப்பாடி ; எம்.எல்.ஏக்கள் டீமோடு வந்த எஸ்.பி.வேலுமணி; பதவியேற்காத சி.வி.சண்முகம்! – பரபர!| “Edappadi K. Arrives Alone, Velumani Enters With MLA Team; Has C. V. Shanmugam Not Taken Oath Yet?

Spread the love

முதலமைச்சர், அமைச்சர், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என்கிற வரிசையிலேயே சபாநாயகர் முன்பு எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு தொடங்கிய பிறகே சி.வி.சண்முகம் அவைக்கு வந்தார். சி.வி.சண்முகம் முன்னாள் அமைச்சர் என்பதால் அவரின் பெயரில் ஆரம்பத்திலேயே வாசிக்கப்பட்டது.

அப்போது அவர் அவையில் இல்லை. தன்னுடைய பெயர் வாசிக்கப்பட்டு முடிந்துவிட்டது என்பதை அறிந்த சி.வி.சண்முகம் அவையிலிருந்து கிளம்பிவிட்டார். அதிமுகவில் பிளவு என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவர்களின் எம்.எல்.ஏக்கள் டீம் டீமாக பிரிந்து அவைக்கு வந்த சம்பவம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இப்படி இன்று அவையில் பதவியேற்காத எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அறையில் தனியாக பதவியேற்றுக் கொள்வார்கள். நாளை சபாநாயகர் தேர்தல் மற்றும் நாளை மறுநாள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பும் நடக்கவிருப்பதால் இன்று மாலைக்குள் பதவியேற்காத எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *