இந்த நிலையில்தான் தற்போது இரண்டு எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் யாரவது ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தவெகவினரும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் விரிவாக்கப்பட்ட அமைச்சர்வையில் வாய்ப்பு வழஙகப்படாதது கிருஷ்ணகிரி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோலவே அதிமுக ஆட்சியில் கே.பி.அன்பழகன், பி.பழனியப்பன் என இரண்டு அமைச்சர்கள் இருந்த தருமபுரி மாவட்டத்தில் 2021 தேர்தலில் ஆட்சிக்கு வந்த திமுக-விற்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்காததால், அமைச்சரவையில் தருமபுரி மாவட்டத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தைப் பொறுப்பு அமைச்சராக நியமித்தார்கள்.

இந்த நிலையில்தான் தற்போது பென்னாகரம் தொகுதியில் செல்வாக்குள்ள காங்கிரஸ் தமிழ்குமரன், பாமக பாடி செல்வத்தை எதிர்த்து தவெக கஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை தங்கள் மாவட்டத்திற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், இப்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.
திமுக போலவே, தவெக-வும் தங்கள் மாவட்டஙகளைப் புறக்கணிப்பதாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.