தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 74 இடங்களுடன் திமுக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனநாயக மரபுகளைப் பின்பற்றும் வகையில் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவிய ஸ்டாலின், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், மக்களாட்சியில் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழக மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று காலை ஜனநாயக மரபுப்படி தன் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியிருக்கிறார். மு.க. ஸ்டாலினின் இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போவது யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.