India
oi-Halley Karthik
மும்பை: கனமழையால் மகாராஷ்டிரா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
இன்று அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கி 3.30 வரை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்கிறது. மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள நந்தேடு, ஹிங்கோலி மற்றும் பர்பானி ஆகிய மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கங்கள் 3.6 முதல் 4.6 வரை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் லேசானது என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.