இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், திமுக கூட்டணியில் உள்ள விசிகவிடம் தவெக ஆதரவு கோரியிருக்கிறது.
இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதல்வராகவும் வேண்டும் என்ற முனைப்புடன் திராவிடக் கட்சிகள் விஜய்க்கு எதிராக காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், “நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரி ரிசார்ட்டில் இருந்து சென்னை வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி தனது கட்சிகாரர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.