Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
சென்னை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஒருமுறை பேசிய “எம்பலத்தி நாலாவது” என்ற வார்த்தையை வைத்து ஒரு தரப்பு பாடல் ஒன்றையே உருவாக்கி இருக்கிறது. தவெக ஆட்சி அமைத்த ஒரு மாதத்தில் செய்த சொதப்பல்களையும், அமைச்சர்களின் சேட்டைகளையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்து ஒன்றரை மாதங்களாகிவிட்ட சூழலில், ஏராளமான பிரச்சனைகள் மற்றும் சொதப்பல்கள் அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சனைகள், மேகதாது அணை விவகாரம், சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் தவெகவினரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையே மிகப்பெரிய சொதப்பலாக மாறிவிட்டது. அதன் செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து அமைச்சர் மரிய வில்சன், நிதியை நீதி என்று சொல்லி மாட்டிக் கொண்டார். இன்னொரு பக்கம் முதல்வர் விஜய் எந்தப் பிரச்சனை குறித்தும் வாய் திறக்காமல் மவுனம் காக்கிறார்.
மகளிருக்கான விடியல் பேருந்துகள் குறைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பர்ஸ்வேல் பொட்டு வைத்த சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். இந்த ஒன்றரை மாதத்தில் தவெக ஆட்சியில் அரங்கேறிய சம்பவங்களை வைத்து எம்பலத்தி என்ற பாடல் சோசியல் மீடியாவில் உருவாக்கி வெளியிடப்பட்டுளது.
கியாரே ப்ரோ எம்பலத்தி என்று தொடங்கும் அந்தப் பாடலில் கம்பலத்தி, அம்பலத்தி, பிம்பலத்தி, வம்பலத்தி, பம்பலத்தி, சொம்பலத்தி, நொம்பலத்தி, தம்பலத்தி, லம்பலத்தி உள்ளிட்ட வார்த்தைகளை வைத்து தவெகவை விளாசி தள்ளியுள்ளனர். இந்தப் பாடல் சோசியல் மீடியாவில் அனைத்து தரப்பினராலும் பகிரப்பட்டு வருகிறது.