திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள், நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாகும் நடைமுறைதான் இப்போது தமிழ் சினிமாவில் இருக்கிறது.
ஆனால், நான்கு வாரத்திலேயே திரைப்படம் ஓடிடி-யில் வருவதால், மக்கள் படத்தை ஓடிடி-யில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள் எனவும், இதனால் திரையரங்க பிசினஸ் பாதிக்கப்படுகிறது எனவும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அதனால் ஓடிடி வெளியீட்டை, திரையரங்க வெளியீட்டிற்கு 8 வாரங்களுக்குப் பிறகு தள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆனால், பாலிவுட்டில் இருப்பதைப் போன்ற இந்த 8 வார ஓடிடி ரிலீஸ் நடைமுறையைப் பின்பற்றினால், தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பது தயாரிப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது.