சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நண்பகல் 12.30 மணியளவில் புகைமூட்டம் திடீரெனக் கிளம்பியது.
அந்த வழியாக பயணித்தவர்களுக்கு லேசான மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டன.
ஆரம்பத்தில், இந்தப் புகைமூட்டத்திற்கான காரணம் தெரியவில்லை.
தலைமைச் செயலகம் அருகே துறைமுகம் இருப்பதால், அங்கிருந்து இந்தப் புகைமூட்டம் கிளம்பியிருக்கலாம் என்று முதலில் கணிக்கப்பட்டது.
அதுபோலவே பின்னர், “துறைமுகத்தில் எந்தத் தீ விபத்தும் இல்லை. ஆனால், வெயிலால் துறைமுகத்தில் இருக்கும் சல்பரில் இருந்து இந்த வாயு வெளியேறியுள்ளது” என்று சென்னை துறைமுகம் விளக்கமளித்துள்ளது.




