அதில் அவர், “என்னைப் பற்றி எழும் எல்லா கேள்விகளுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
நான் ஒரு திரைப்பட நடிகை என்பதால் மக்கள் என்னைப் பற்றிப் பேசலாம். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு.
கடந்த இரண்டு ஆண்டுகள் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் இருண்ட காலமாக இருந்தது.

அந்தச் சமயத்தில் எனது தாய் மோனா மோத்வானி மற்றும் சகோதரர் பிரசாந்த் மோத்வானி ஆகியோர்தான் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தனர்.
மன அழுத்தத்திலிருந்து மீள அவர்கள் எனக்கு பக்கபலமாக நின்றனர். இப்போது நான் அந்தத் துயரங்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தவறான உறவில் இருந்து துன்பப்படுவதை விட, அதிலிருந்து வெளியேறுவதே நல்லது. வேலையில் கவனம் செலுத்துவதே எனக்கு இப்போதைய முக்கியக் குறிக்கோள்” எனக் கூறியிருக்கிறார்.