கூட்டம் கொத்தோடு கலைவதைக் கண்டு ஜெர்க் ஆன விஜயபாஸ்கர்கள், பாதுகாவலர்களை அழைத்து கதவை மூட சொல்லியும் வெளியே இருந்து கூட்டத்தை இழுத்து பிடித்து வரவும் உத்தரவிட்டனர். வம்படியாக உள்ளே இழுத்து கேமராவுக்கு கூட்டம் காட்டுமளவுக்கு அரங்கத்தைப் பாதியளவு நிறைத்திருந்தனர்.
இரண்டு விஜயபாஸ்கர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. இதைப் பற்றியும் கூட்டத்தில் டச் செய்து சென்றனர். அருண்ராஜ் பேசும் போது, ”நம் கட்சிக்கு வந்த பிறகு தலைவர் எந்தத் தப்பும் செய்யவிடமாட்டார்” என்பதைப் போல பேசினார். எனில் இதற்கு முன்புள்ள கோட்டையெல்லாம் அழித்துவிடுவார்களோ எனும் கேள்வி எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், ”இனிமேல் நீங்கள் எங்கள் கட்சி. உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்வோம்” எனப் பேசி வாஷிங் மெஷிங்னில் சலவைப் பொடியை அள்ளி வீசிச் சென்றார்.

விழா முடிந்த பிறகு எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் சாப்பிட தனி இடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே ”ஆனந்த் அண்ணன் வெஜ்ணே… அருண்ராஜ் சாருக்கு என்ன வேணும்னு கேட்டு வைங்கண்ணே…” என கேட்டரிங்காரர்களோடு சாம்பார் வாளி தூக்காத குறையாக ஏகத்துக்கும் உபசரித்து அமைச்சர்களுடனேயே அமர்ந்து விருந்தையும் விஜயபாஸ்கர்கள்.
கடைசியாக, ‘தளபதிட்ட ஒரு டேட் வாங்கி கொடுங்க. ஊர்ல வச்சு விழா எடுத்து ஜமாய்ச்சிடுறோம்’ என தவெகவின் முக்கியஸ்தர்களிடம் கூறி சலவையில் வெளுத்த வெள்ளந்தி சிரிப்போடு எல்லாரையும் வழியனுப்பி வைத்தனர் விஜயபாஸ்கர்கள்.