தவெக விஜய்க்கு 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுமா?| Will Vijay get 15 days to prove majority what happened to Yediyurappa

Spread the love

கர்நாடக எடியூரப்பா விவகாரம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

2018 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எடியூரப்பா 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் பெரும்பான்மைக்கு 8 இடங்கள் குறைவாக இருந்தது.

ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கினார். ஆனால், காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு, ஜனநாயகப் படுகொலையைத் தவிர்க்கவும் குதிரை பேரத்தைத் தடுக்கவும் உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இதனால் 15 நாள் அவகாசம் வெறும் 24 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

விஜய்க்கு ஏற்படும் அரசியல் நெருக்கடி

விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னால், குறுகிய காலத்தில் ஆதரவைத் திரட்ட வேண்டி வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *