India
oi-Halley Karthik
பாட்னா: ஓடும் ரயில் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்ட போது, முறையான டிக்கெட் இல்லாமல் பயணித்த இளம்பெண் ஒருவர், திடீரென தனது ஆடையை கிழத்துக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
பீகார் மாநிலம் தானாபூரிலிருந்து செகந்திராபாத் நோக்கி சென்ற தானாபூர்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ராதிகா திவாரி என்கிற அந்த பெண் பயணி, இந்த ரயிலில் செகண்ட் ஏசி வகுப்பில் பயணித்திருக்கிறார்.
டிக்கெட் செக்கிங்
டிக்கெட் பரிசோதகர் வழக்கமான தனது செக்கிங் பணியை செய்துக்கொண்டிருந்தபோது, இவர் மாட்டியிருக்கிறார். இவரிடம் டிக்கெட் கேட்டபோது.. பணத்தை எடுத்து நீட்டி, இதை லஞ்சமாக வைத்துக்கொண்டு தன்னை பயணிக்க அனுமதிக்குமாறு ராதிகா கேட்க.. டிக்கெட் பரிசோதகர் மறுத்து, அபராதம் விதித்திருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த பெண் உடனே மொபைல் எடுத்து.. யாருக்கோ போன் செய்து.. எனது அண்ணன் கூட TTE தான் பேசுருறியா? என்று கேட்டிருக்கிறார்.
என்கிட்டயே டிக்கெட் கேட்குறீயா
ஆனால், டிக்கெட் பரிசோதகர் எதற்கும் அசைந்துக்கொடுக்கவில்லை. அபராதம் கட்ட வேண்டும் என்று கட்டாயமாக சொல்லிவிட்டார். இதனால் டென்ஷன் ஆன ராதிகா.. உன்னை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவேன் பார்த்துக்கோ என்று மிரட்டியிருக்கிறார். ஆனால், எதையும் டிக்கெட் பரிசோதகர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ராதிகா.. சட்டென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது மேலாடையை கிழித்துக்கொண்டார்.
A girl was allegedly traveling on a train without a ticket. When the ticket checker asked her to show her ticket, she started threatening him and even began tearing her own clothes. If the incident had not been recorded, serious allegations could have been made against the staff.…
— Sachin Unfiltered (@TheSachinView) September 19, 2026

ஆடையை கிழத்துக்கொண்ட ராதிகா
பின்ன தன் வீட்டுக்கு போன் செய்து.. டிக்கெட் பரிசோதகர் தன்னுடைய ஆடையை தொட்டதாகவும், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். மட்டுமல்லாது 112 அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் கொடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அங்கு நடந்த சம்பவம் முழுவதும் வீடியோவாக ரெக்கார்ட் ஆகியிருப்பது ராதிகாவுக்கு தெரியவில்லை.
போலீஸ் விசாரணை
இதை இப்படியே விட்டால், நம் வேலையை காலி செய்துவிடுவார் என்று உணர்ந்த டிக்கெட் பரிசோதகர் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து ரயில் உத்தரப் பிரதேசத்தின் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா ஜங்ஷனுக்கு வந்ததும், அங்கு தயாராக இருந்த ரயில்வே போலீசார் பெண்ணை இறக்கி விசாரணை நடத்தினர்.
வீடியோ ஆதாரம்
சக பயணிகள், அந்த பெண் நடந்துக்கொண்ட விதம் தொடர்பான வீடியோ ஆதாரம் காட்டியதை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் டிக்கெட் பரிசோதர் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், ராதிகாவுக்கு ரூ.1000 விதிக்கப்பட்டு, டிக்கெட் வழங்கப்பட்டு அங்கிருந்து அப்பெண் வேறு ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும், அந்த பெண்ணை அப்படியே விட்டிருக்க கூடாது. இதனால், வேறு ஏதாவது ஒரு இடத்தில் குற்றம் செய்யப்படாத ஆண் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே அப்பெண் மீது சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? டிக்கெட் பரிசோதகர் புகார் ஏதும் கொடுக்காமல் விட்டது சரியா? அல்லது புகார் கொடுத்திருக்க வேண்டுமா?