திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலக்கழிவுகள்; பின்னணி என்ன? \ Dindigul: human excreta mixed into government school’s drinking water tank.

Spread the love

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குடிநீர் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கிடந்துள்ளது. மேலும் அந்தக் கவருக்குள் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட மாணவர்கள் இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

தொட்டிக்குள் கிடந்த பேப்பர்

தொட்டிக்குள் கிடந்த பேப்பர்

உடனே ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் சொல்லவும் விரைந்து வந்த வடமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

குடிநீர் தொட்டிக்குள் கிடந்த பேப்பர் நனைந்திருந்ததால் அதில் இருந்த எழுத்துகள் படிக்க முடியாத அளவிற்கு அழிந்து போயிருந்தன.

பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *