தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு கடிதங்கள் இல்லை என ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தரப்பு தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஒரு புதிய தேர்தலைத் தவிர்க்கவும், தவெக-வைத் தடுக்கவும் திமுக – அதிமுக கூட்டணியில் ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தவெக-வுடன் கூட்டணி இல்லை என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார்.