‘திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?’ குமுறும் விசிக தொண்டர்கள்! | VCK Cadres Question Why Shanavas Attended DMK Meeting But Skipped VCK Conference

Spread the love

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. “ஷாநவாஸிடம் கட்சித் தலைவர் திருமா விளக்கம் கேட்க வேண்டும்’ என குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை ஒருங்கிணைத்தது அக்கட்சி. ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட மிகப்பெரும் குளறுபடியாலும் தொண்டர்களின் அத்துமீறலாலும் மாநாட்டை பாதிலேயே நின்றுபோனது. அதேநேரம் கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஷாநவாஸ் மாநாட்டு பணிகளிலும் பங்கேற்காமல், மாநாட்டுக்கும் வராமல் இருந்துவிட்டார் எனக் குற்றம்சாட்டி வருகிறார்கள் வி.சி.க சீனியர்கள்.

நம்மிடம் பேசிய சீனியர் சிறுத்தைகள், “வி.சி.க-வின் முதன்மைச் செயலாளர் என்பது தலைவர், பொதுச்செயலாளர் பிறகு மிக முக்கியமான பொறுப்பு. அப்பொறுப்பு வகிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ ஷாநவாஸ் மாநாட்டுக்கு ஆப்சென்ட்டாகி விட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த அவர், சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். இருந்தபோதிலும் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழுக்களில் அவரது பெயர் இடம்பெற்றது.

விசிக மாநாடு - திருமாவளவன்

விசிக மாநாடு – திருமாவளவன்

ஆனாலும் அவர் கட்சி பணிக்கு திரும்பவில்லை. த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற்றிருக்கும் சூழலில், ‘தமிழ்நாட்டில் மறைமுக பா.ஜ.க ஆட்சி நடக்கிறது’ எனப் பேட்டிக் கொடுத்தவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வந்தார். கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர் எங்கள் தலைவரின் பிறந்தநாளன்று நடந்த வி.சி.க மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஆகையால் ‘அவர் ஏன் பங்கேற்கவில்லை.. அவர் என்ன முடிவில் இருக்கிறார்?’ என ஷாநவாஸிடம் விளக்கம் கேட்ட வேண்டுமென்ற குரல் கட்சிக்குள் எழுந்துள்ளது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *