தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று கோட்டைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் திமுக சார்பு பணியாளர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக வேறு வேறு இடங்களுக்கு மாற்றுமாறு முதல்வர் அலுவலகம் கறார் உத்தரவு பிறப்பித்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.
ஒரு புதிய ஆட்சி அமைந்தவுடன், பழைய ஆட்சியின் அரசியலர்களுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் இடமாற்றம் செய்வது வழக்கமே. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் ஆட்சியின் போதுமே இது நடக்கும். அதே வழக்கத்தை இப்போது தவெக ஆட்சியிலும் கடைப்பிடித்திருக்கின்றனர்.
தலைமைச் செயலகத்தில் திமுக அமைச்சர்களின் கீழ் பணியாற்றிய பி.ஏ தொடங்கி ஆபிஸ் அசிஸ்டண்ட் வரைக்கும் அத்தனை பேரையும் வேறு வேறு துறைகளுக்கு வேறு வேறு அதிகாரிகளின் கீழ் பணியாற்ற இடமாற்றியிருக்கின்றனர்.