கடந்த காலமும், நிகழ்கால சந்திப்புகளும்
சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி ஆகிய இருவரும் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று தங்களது பிராந்தியக் கட்சிகளைத் தொடங்கியவர்கள். மம்தா பானர்ஜி 1998-ல் திரிணாமுல் காங்கிரஸையும், சரத் பவார் 1999-ல் சோனியா காந்தியின் “வெளிநாட்டு பூர்வீகம்” என்ற பிரச்சினையின் பேரில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் நிறுவினார். அவருடன் வெளியேற்றப்பட்ட தாரிக் அன்வர் பின்னர் காங்கிரஸுக்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திகளுக்கு மேலும் தீனி போடும் விதமாக, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் இந்த வாரம் அடுத்தடுத்து சந்தித்தனர். ஒன்றரை மணி நேரம் நீடித்த சந்திப்பில், திரிணாமுல் கட்சி ஒரு வலுவான கூட்டணியை விரும்புவதாகவும், எதிர்க்கட்சிக் குழுவில் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்பதாகவும் அபிஷேக் பானர்ஜி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இணைப்புக்கான எந்தவொரு தொடக்கமும் திரிணாமுல் தரப்பிலிருந்துதான் வர வேண்டும் என்றும், தாங்களாக இந்த நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பு தெளிவாகக் கூறியுள்ளது.
மீண்டும் அகண்ட காங்கிரஸ் சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!