திருச்சி: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சோதனை!

Spread the love

அங்கிருக்கும் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இன்னொருபக்கம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டுக்கு வருகை தந்தார். ஆனால், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் அளித்தல், புதுப்பித்தல் மற்றும் தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, தகுதியற்ற பல தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாகவும், அதன் அடிப்படையிலுமே தற்போது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்தச் சோதனையை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *