ஆதிசங்கரர் பேரவை என்கிற அமைப்பின் மூலமாக ஒன்று சேர்ந்த அன்பர்களின் பெருமுயற்சியால், இந்த ஆலயம் நல்ல நிலையில் பராமரிக்கப்படுகிறது. தற்போது பெருமாளுக்குரிய அனைத்து விசேஷங்களும் மிக அருமையாக நிகழ்ந்தேறி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல வருடங்களுக்குப் பிறகு, முதன் முறையாக இந்த வருடம் முதல் பிரும்மோற்சவ நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த அற்புதத் திருத்தலத்தில்தான் சக்திவிகடனும் ஆதிகேசவபெருமாள் திருக்கோயில் நிர்வாகமும் ஆதிசங்கரர் பேரவையும் இணைந்து திருவிளக்குபூஜை நடத்த உள்ளனர். இந்த நிகழ்வை ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ், தீபம் விளக்கேற்றும் எண்ணெய், சக்தி மசாலா ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள்.
முன்பதிவுக்கு: 044-66802980/07

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07