Tamilnadu
oi-Halley Karthik
திருவாரூர்: பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக, தவெக நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று காலை சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக நிர்வாகிகள் குற்றங்களில் ஈடுபடுவதாக விமர்சித்திருந்தார். இதைனயடுத்து ஒரு சில மணி நேரங்களிலேயே தவெகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஆவர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
