“முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரை இல்லை" – பிரேமலதா விஜயகாந்த்

Spread the love

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் 2-வது தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரை முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், “இன்றைக்கு சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை முழுவதும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலுமே அமைந்திருந்தது.

ஆளுநர் அர்லேகர்
ஆளுநர் அர்லேகர்

தற்போதைய சூழலில் மாநிலத்தில் நடந்து வரும் முக்கிய சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து அதில் இல்லை. கடந்த ஆட்சியின் திட்டங்கள் குறித்து ஆளுநரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் முழுக்க முழுக்க ஆட்சியாளர்களுக்குத் தகுந்தாற்போலவே வடிவமைக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதையும், இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதையும் நாங்கள் வரவேற்கிறோம்; அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த உரை ஆளும் தரப்பிற்கு மட்டுமே ஆதரவான ஒரு உரையாக மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆளுநர் உரையின் பிற அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசுக்கு எதிராக அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்தும் தே.மு.தி.க-வின் விரிவான அவதானிப்புகளையும், கருத்துகளையும் நாளை செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாகவும் விளக்கமாகவும் வெளியிடுவேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *