“திரைக்கதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ்.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் சிஷ்யராக திரைப்பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என இவருக்கு பல முகங்கள்.
1971-ம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். முதல் திரைப்படமே இவருக்கு பெயரையும், புகழையும் அள்ளி தந்தது.
முந்தானை முடிச்சு, அந்த ஏழு நாள்கள், தூரல் நின்னு போச்சு என தமிழ் திரையுலக வரலாற்றில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்தார்.

குடும்பச் சூழல், நகைச்சுவை, எதார்த்தம், சமூக கருத்துகள் ஆகியவை இவரது திரைக்கதைகள் மற்றும் திரைப்படத்தின் பலம்.
தமிழ் மொழியுடன் இந்தி மற்றும் தெலுங்கிலும் திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
‘ஒரு கை ஓசை’ திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதை இவர் பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் தான் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்திருந்தார்.
மாரடைப்பு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை சென்னையில் காலமானார் பாக்யராஜ் (வயது 73).