திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ சந்திரசேகர் ஆதரவு அணி அதிக இடங்களைக் கைப்பற்றியது

Spread the love

மறைந்த நடிகர் பாக்யராஜ் தலைவராக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.

2026 -29 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, எஸ்.ஏ சந்திரசேகர் வழிகாட்டுதலில் ’திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்’ அணியும் இயக்குநர் சேரன் தலைமையில் ’நம்ம கே.பாக்யராஜ்’ அணியும் போட்டியிட்டன.

நேற்று காலையிலிருந்து நடந்த  விறுவிறுப்பான வாக்குப்பதிவில் இயக்குநர்கள், திரைப்பட எழுத்தாளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

எஸ்.ஏ சந்திரசேகர் மனைவி சோபாவுடன் வந்து வாக்களித்தார்.

மாலையில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முக்கியப் பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் பதவிகளை சேரன் அணி கைப்பற்றியது.

எஸ்.ஏ. சந்திரசேகர்

எஸ்.ஏ. சந்திரசேகர்

தலைவராக சேரனும் துணைத் தலைவர்களாக சமுத்திரக்கனி, சிநேகன் இருவரும் தேர்வானார்கள். செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகரும் பொருளாளராக ஆர். சுந்தர் ராஜனும் தேர்வு செய்யப்பட்டனர். 4 இணைச் செயலாளர் பதவிகளில் ஒரு பதவி மட்டும் இந்த அணிக்கு கிடைத்தது.

மீதமுள்ள 3 இணைச் செயலாளர் பதவிகளையும் செயற்குழு உறுப்பினர்களில் 12 இடங்களில் 8 இடங்களையும் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி பிடித்தது.

ஆக மொத்தமுள்ள 21 இடங்களில் சேரன் தலைமையிலான ’நம்ம கே பாக்யராஜ்’ அணி 10 இடங்களையும் வி.சி குகநாதன் தலைமையில் போட்டியிட்ட திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் அணி 11 இடங்களையும் வென்றன.

முக்கியப் பதவிகள் ஒரு அணிக்கும் பெரும்பான்மை இடங்கள் இன்னொரு அணிக்கும் கிடைத்திருப்பதால் நிர்வாகம் எப்படி நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *