துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதித்த நீதிமன்றம்| The court has permitted the release of the film Dhruva Natchathiram

Spread the love

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துருவ நட்சத்திரம்”.

2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ஓவர் பட்ஜெட், கால் ஷீட் பிரச்னை, கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீஸாகாமல் இருந்தது. நிதி தொடர்பானப் பிரச்னையால் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கும் தொடரப்பட்டு இருந்தது

துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில்...

துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில்…

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்ய கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல்.30) ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

அதாவது விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிடலாம். அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *