தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சொக்கலிங்கம் தனது பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அத்துடன் அந்த மாணவியிடம் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.